Friday, February 10, 2012

பருப்புருண்டைக் குழம்பு + பக்கோடா


தேவையான பொருட்கள்:

(இருவருக்குத் தேவையான அளவு)

உருண்டைகள் செய்ய

துவரம்பருப்பு - 3/4 கோப்பை
பெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 3 பற்கள்
பச்சைமிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு அரைக்க

தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி

குழம்புக்குச் வதக்க, சேர்க்க

தக்காளி பெரியது - 1
பெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 3 பற்கள்
கரம் மசாலப் பொடி - 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/4 கோப்பை
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
கடுகு, உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

உருண்டைகள் செய்யும் முறை
  • துவரம்பருப்பைச் சுமார் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • ஒரு வெங்காயம், 3 பூண்டுப் பற்கள், 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுப்   பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,  பூண்டு மூன்றையும் பொன்னிறமாக வதக்கவும்.
  • தண்ணீர் வடிகட்டிய பருப்புடன்,  கரம் மசாலாப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய்த்துருவல் 4 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  • சிறிய லட்டு அளவில் 6 உருண்டைகள் இறுக்கமாகப் பிடிக்கவும்.
குழம்பு செய்யும் முறை
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து, பட்டை, கிராம்பு, சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஒன்று, 3 பூண்டுப் பற்கள்,  தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் புளிக்கரைசல், மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போனது ம்  தேங்காய், சோம்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • நன்கு நுரைத்து படத்தில் உள்ள பக்குவத்துக்கு வரும்போது அடுப்பின் தீயை மட்டுப்படுத்தி, பிடித்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாக இட்டு, வாணலியை மூடிவைக்கவும்.



  • சற்று நேரம் கழித்து உருண்டகளை மெதுவாகப் புரட்டி விடவும்.
  • உருண்டைகள் வேகச் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் பிடிக்கும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் உருண்டை பிடித்துபோக மீதமுள்ள கலவையைக் கிள்ளிப் பொரித்தால் பக்கோடா தயார்.
குறிப்பு: 
  • முழுவதும் துவரம்பருப்பு சேர்க்காமல், பாதி துவரம்பருப்பு, பாதி கடலைப்பருப்பு சேர்க்கலாம்.
  • கவனமாகச் செய்தால் உருண்டை உடையும் வாய்ப்புகள் இல்லை; இருந்தாலும், உடைந்து விடுமோ என்று தோன்றினால் இட்லிப்பானை  ஆவியில் உருண்டைகளை வேகவைத்துச் சேர்க்கலாம்.
கற்றுக்கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா



2 comments:

Unknown said...

அம்மாவின் கைபக்குவம் தனி தான்.. நல்லதொரு குறிப்பு

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சிநேகிதி

Post a Comment