Wednesday, February 22, 2012

எண்ணெய்க் கத்தரிக்காய் மசாலா

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 8
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பற்கள்
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
வறுத்த நிலக்கடலை (தோல் நீக்கியது) - 1/3 கோப்பை
எள்ளு (வெள்ளை / கறுப்பு) - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
நீர்த்த புளிக்கரைசல் - 1/4 கோப்பை
எண்ணெய் - 1/3 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கத்தரிக்காய்களை காம்பு நீக்கி நீள்வாக்கில் கீறிக்கொள்ளவும்.(பெரிய கத்தரிக்காயாக இருந்தால் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.)
  • எள்ளு, கொத்தமல்லி விதை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் கடலை, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • வதக்கிய வெங்காயம், தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களைப் போடவும்.
  • கத்தரிக்காய் நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.

  • மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

  • கத்தரிக்காய் அதிகம் குழையாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • மசாலா இறுகி வந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:

  • க்ரேவி போல வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் முன்னாலேயே எடுத்து விடலாம்.
  • நம் வீட்டிற்காகச் செய்யும் போது எண்ணெய் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.
  • பிரியாணி, நெய் சாதம், தக்காளி சாதம், சப்பாத்தி இவற்றுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

கற்றுக் கொடுத்தது: திருமதி. நளினி சதானந்த், தோழி

No comments:

Post a Comment