தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு - 3/4 கோப்பை
புளித்த இட்லி / தோசை மாவு - 1 கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குறிப்பு:
கற்றுக் கொண்டது:
பெசரட்டு செய்த போது இதைச் செய்தால் என்ன என்று தோன்றியபோது செய்தது.
பாசிப்பயிறு - 3/4 கோப்பை
புளித்த இட்லி / தோசை மாவு - 1 கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
- பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- தாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு:
- மாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.
- காரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
கற்றுக் கொண்டது:
பெசரட்டு செய்த போது இதைச் செய்தால் என்ன என்று தோன்றியபோது செய்தது.