Wednesday, March 9, 2011

உருளைக்கிழங்கு பச்சைமிளகாய்க் குருமா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பற்கள்
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு பிடி
துருவிய தேங்காய் - 3/4 கோப்பை
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - 4 துண்டுகள்
கிராம்பு - 3
சோம்பு - 2 தேக்கரண்டி
கச கசா - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேகவைத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் கொத்தமல்லிவிதை, கீறிய பச்சைமிளகாய் வறுத்துக் கொள்ளவும். பின், இதனுடன் தேங்காய், சோம்பு, கச கசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய், எண்ணெய் விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பின் உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடவும்.
  • பச்சை வாசம் போகும் வரை கொதித்து அடங்கியதும், தீயைச் சற்றே தணித்துவிட்டுத் தயிரைச் சேர்க்கவும்.
  • இரண்டு மூன்று நிமிடங்களுப்பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.



குறிப்பு:

  • இஞ்சி வேண்டுபவர்கள் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேங்காய் விழுது அரைக்கும் போது முந்திரிப்பருப்பு ஒன்றிரண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
  • அதிகமான பச்சை நின்றம் வேண்டுவோர், கொஞ்சமாகக் கொத்தமல்லித் தழையையும் தேங்காயுடன் அரைத்துக்கொள்ளலாம்.
  • தயிருக்குப் பதிலாக 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
கற்றுக்கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

Friday, March 4, 2011

தேங்காய்ப்பால் சாதம்

தேவையான பொருட்கள்:


பச்சரிசி / பிரியாணி அரிசி - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி சிறியது - 1
பட்டை - 3 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
வெண்ணெய் / நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 தேக்கரண்டி
புதினா - 6 இலைகள் மட்டுமே
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
  • துருவிய தேங்காயிலிருந்து தேங்காய்ப்பால் எடுக்கவும்.
  • வாணலியில் வெண்ணெய் / நெய், எண்ணெய் சேர்த்துச் சூடேறியதும், பொடித்த சோம்பு, பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு நேர்த்து வதக்கவும்.
  • தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய்ப்பாலுடன் தேவையான தண்ணீர், அரிசி, உப்பு சேர்க்கவும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.

குறிப்பு:


இந்தச் சாதத்தில், ருசியைவிட மணம் மட்டுமே மிகவும் தூக்கலாகத் தெரியும். எனவே, இது மேலும் ருசிக்க, சரியான குழம்பு வகை வேண்டும். காரமான குருமா, முட்டைக்குழம்பு, அல்லது காரமான ஏதாவது சைவ / அசைவ மசாலாக் குழம்பு வகை பொருத்தமானதாக இருக்கும்.

கற்றுக் கொடுத்தது:  திருமதி. ஜோதி,  அத்தை