Tuesday, June 28, 2011

பருப்புவடை மோர்க்குழம்பு


தேவையான பொருட்கள்:

மோர் - 2 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 10
வற்றல் மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
பருப்பு வடை - 7
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, வெந்தயம் - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லித்தழை - தூவும் அளவுக்கு

செய்முறை:


  • துவரம்பருப்பு, பச்சரிசி, கொத்துமல்லி விதை இவை அனைத்தையும் சுமார் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த பொருட்களுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், வற்றல்மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
  • பின் அரைத்த விழுதுடன் மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
  • பின் மோரை அத்னுடன் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • மோர் திரிந்து விடாமல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் கொதிக்கவும் வேண்டும்.
  • சற்றே இறுக்கமாக இந்தக்கலவை வரும் போது பருப்பு வடைகளையும் போட்டு விடவும்.
  • பின் இரண்டு, மூன்று நிமிடங்களில் கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.
  • வடை நன்கு ஊற சுமார் 30 நிமிடங்களாவது பிடிக்கும்.




குறிப்பு: பருப்பு வடைகள் அதிகம் மொறுமொறுப்பாக இல்லாமல், சற்றே தடிமனாகத் தட்டிக் கொள்ளவும்.


கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா