Monday, December 13, 2010

சங்கரா மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சங்கரா மீன் துண்டுகள் - 4
தக்காளி சிறியது - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 6 பற்கள்
வெங்காயம் - 1
மிளகாய்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • மீன் துண்டுகளை மஞ்சள் உப்பு போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.
  • தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும்.
  • புளியைக் கெட்டிக் கரைசலாகக் கரைத்து, அதனுடன் அரைத்த தக்காளி விழுதைச் நேர்க்கவும்.
  • இதனுடன் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  • மிளகையும், கறிவேப்பிலையையும் கல்லில் தட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
  • இடித்த மிளகு கறிவேப்பிலையுடன் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வாசம் வந்ததும் தக்காளி, புளிக் கரைசலை போட்டுக் கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு வாணலியை மூடி வைக்கவும்.
  • அடுப்பின் நெருப்பு மிதமாக வைக்கவும்.
  • சுமார் 7 நிமிடங்களில் மீன் துண்டுகள் வெந்து விடும்.


குறிப்பு:

  • மீன் சுத்தம் செய்ய, சாம்பல் இல்லையெனில் கோதுமை மாவு, கல் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசறி வைத்துக் கழுவலாம்.
  • மீன் துண்டுகளைக் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தும் போது மஞ்சள்பொடி, உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி கலந்து வைக்கவும்.
  • மீன் கழுவும் போதும், மசாலா சேர்க்கும் போதும் மீன் குளிர்ச்சியாக இருக்கக் கூடாது.
  • விருப்பப்பட்டால், தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.
  • தாளிப்பதற்கு வடகம் வைத்திருப்பவர்கள் அதைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை