தேவையான பொருட்கள்:
தக்காளி - 3 சிறியது / 2 பெரியது (மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும்)
புளிக் கரைசல் - ஒரு சிறிய எலுமிச்சையளவு புளியின் கரைசல்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு, பெரிய பற்கள் - 10 (இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவ
தாளிக்க:
எண்ணெய் (2 அல்லது 3 மேசைக்கரண்டி) கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம், சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை
(தாளிக்கும் வடகமும் பயன்படுத்தலாம்)
செய்முறை:
தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் புளிக்கரைசல், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு- இவை அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானவுடன், கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம் தாளிக்க வேண்டும். பின்
வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் அனைத்து பொருட்களும் கலந்த கரைசலை வாணலியில் இட வேண்டும். பச்சை வாசனை போகின்ற வரையில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும
கற்றுக் கொடுத்தது : தோழி ஷோபா.