Friday, March 4, 2011

தேங்காய்ப்பால் சாதம்

தேவையான பொருட்கள்:


பச்சரிசி / பிரியாணி அரிசி - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி சிறியது - 1
பட்டை - 3 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
வெண்ணெய் / நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 தேக்கரண்டி
புதினா - 6 இலைகள் மட்டுமே
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
  • துருவிய தேங்காயிலிருந்து தேங்காய்ப்பால் எடுக்கவும்.
  • வாணலியில் வெண்ணெய் / நெய், எண்ணெய் சேர்த்துச் சூடேறியதும், பொடித்த சோம்பு, பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு நேர்த்து வதக்கவும்.
  • தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய்ப்பாலுடன் தேவையான தண்ணீர், அரிசி, உப்பு சேர்க்கவும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.

குறிப்பு:


இந்தச் சாதத்தில், ருசியைவிட மணம் மட்டுமே மிகவும் தூக்கலாகத் தெரியும். எனவே, இது மேலும் ருசிக்க, சரியான குழம்பு வகை வேண்டும். காரமான குருமா, முட்டைக்குழம்பு, அல்லது காரமான ஏதாவது சைவ / அசைவ மசாலாக் குழம்பு வகை பொருத்தமானதாக இருக்கும்.

கற்றுக் கொடுத்தது:  திருமதி. ஜோதி,  அத்தை

4 comments:

ஜெய்லானி said...

இந்த சாப்பாட்டை சாப்பிட்டா எனக்கு ஒவரா தூக்கம் வரும் ஏன்னு தெரியாது ..அதனால நோ கமெண்டஸ் :-))

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் ஜெய்லானி..தூக்கமோ தூக்கம் வரும்

arbrunei said...

தேங்காய் பாலில் உள்ள கொலுப்பு சத்துதான் தூக்கத்திற்கு காரணம்,அம்மணி.
-அப்துல் ரஹ்மான்

சாந்தி மாரியப்பன் said...

எங்களுக்கும் ரொம்ப பிடிச்ச அயிட்டம் இது.. இதோட முந்திரியையும் நெய்யில் வறுத்து சேர்ப்போம்.அபாரமா இருக்கும்.

Post a Comment