Tuesday, October 16, 2012

சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு

தேவையான பொருட்கள்:

சிவப்புப் புட்டு அரிசி மாவு - 1/2 கோப்பை
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - சீனி - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புட்டு மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு உப்புக் கலந்த நீரைத் தெளித்துக் கட்டி தட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

  • பின் புட்டுப் பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் மாவு, பின் தேங்காய் என்று மாறி மாறிப் பரப்பவும்.






  • புட்டுப் பாத்திரத்தை மூடி, குக்கரில் வெய்ட் வைக்கும் இடத்தில் பொறுத்தவும்.
  • 5 நிமிடங்கள் நல்ல ஆவியில் வெந்ததும், இறக்கவும்.
  • அகலமான பாதிரத்தில், புட்டை இட்டு, அதனுடன், சர்க்கரை, நெய், சேர்த்துக் கிளறவும்.

  • மீண்டும் புட்டுப் பாத்திரத்தில் சற்றே இறுக்கமாக அழுத்தி வைத்து, ஒரு தட்டில் கவிழ்க்கவும்.

குறிப்பு:
  • வெள்ளை அரிசிப் புட்டுக்கும் இதே குறிப்புதான்.
  • தேவைப்படுமானால், ஏலக்காய்ப் பொடி, பொடித்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.
  • குழாய்ப் புட்டு போலவே, தேங்காய்ச் சிரட்டையில் புட்டு செய்வதும் கேரள உணவின் சிறப்பம்சம். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக இப்பாத்திரம்.
  • வாழைப்பழத் துண்டுகள் சேர்த்துச் சாப்பிட்டால் அலாதி ருசி தரும்.
  • நெய் சேர்க்காமல், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் தொந்தரவுகள், இடுப்பு வலி உள்ளவர்கள், வயதுக்கு வந்த பெண்கள் முதலியோர்க்கு சக்தி தரும் உணவாகும் இது.
 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

very nice

Post a Comment