தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பற்கள்
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
தாளிக்க - கடுகு,உளுந்து, எண்ணெய், கறிவேப்பிலை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
குறிப்பு:
தக்காளி - 3
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பற்கள்
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
தாளிக்க - கடுகு,உளுந்து, எண்ணெய், கறிவேப்பிலை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
- சுருண்டு வதங்கியபின், வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.
- மிளகாய்ப்பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைக்கவும்.
- ஐந்து நிமிடங்கள் கழித்து, விழுதாக அரைத்த தேங்காய் சீரகத்தைச் சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு:
- சாதத்தில் பிசைந்து சாப்பிட, சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிட என்று அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.
- தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
4 comments:
அருமையாக இருக்கு.இந்தப் பச்சடி செய்து நாளாச்சு.
பச்சடி நல்லா இருக்கு.அருமை.!
நன்றி ஆசியா...
வாங்க ராதா ராணி..மிக்க நன்றி..
ரொம்ப நல்ல இருக்கு.
Post a Comment