Tuesday, January 10, 2012

கோவைக்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - 150 கிராம்
வெங்காயம் சிறியது - 1
தக்காளி - சிறியது 2
புளி - சிறிய எலுமிச்சையளவு
மிளகாய்வற்றல் - 8
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
கடுகு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
  • கோவைக்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கழுவித் தண்னீர் வடிகட்டவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளிக்கவும்.
  • கோவைக்காயைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்
  • கொத்துமல்லி விதை, கிள்ளிய வற்றல்மிளகாய், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  • நன்கு வதங்கி, ஆறியதும், உப்பு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு:
  • சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளவும் சுவையாக இருக்கும்.
  • தேவைப்பட்டால், சிறிது தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றுக் கொடுத்தது: திருமதி சகுந்தலா கிருஷ்ணமூர்த்தி, தோழி

2 comments:

கோமதி அரசு said...

பாசமலர் நலமா?
இன்றைய வலைச்சரத்தில் இந்த பதிவு.
வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

இராஜராஜேஸ்வரி said...

சத்தான துவையல் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

வலைச்சர அறிமுகத்துக்கு
வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!

Post a Comment