Saturday, May 29, 2010

ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 250 கிராம்
இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி
எண்ணெய் - 3/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கறியைச் சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
  • அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும்.
  • கறியுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பிசறிக் குக்கரில் முக்கால் வேக்காடு வேகவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்தவுடன், கறித்துண்டுகளைச் சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும்.
  • துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்வரை வறுக்க வேண்டும்.
குறிப்பு:

  • இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும்.
  • காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை.
  • கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.
கற்றுக் கொடுத்தது - பத்மா, என் அம்மா

3 comments:

ஜெய்லானி said...

எனக்கு பரோட்டாவை விட தோசைக்கு மட்டன் சுக்கா காம்பினேஷனே பிடிக்கும். பாக்கும்போதே ரெண்டு பிளேட் கேக்குது.

ஜெய்லானி said...

போட்ட கமெண்ட கானேம்!!!!!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'பிரதிபலன் பாரா பதிவுகள்'
'நிறைய' எழுத வாழ்த்துகள்!

Post a Comment