Thursday, May 6, 2010

துவரம்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 1/2 கோப்பை (200 மி.லி. கோப்பை)
பச்சரிசி - 1 கோப்பை
துவரம்பருப்பு - 3/4 கோப்பை
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

  • அரிசி, பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து இட்லி மாவு பக்குவத்திற்கு அரைக்கவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்க்கவும்.
  • கெட்டியாக இல்லாமல், மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும். (கோதுமை தோசை பதத்துக்கு)
  • தோசைக்கல் நன்றாகச் சூடேறிய பின், கோதுமை தோசை வார்ப்பது போல், கல்லின் விளிம்பிலிருந்து தோசை ஊற்றவும்.
  • மேற்பரப்பு நன்றாய்ச் சிவந்தவுடன், அடுத்த பக்கம் திருப்பிப் போடவும்.


குறிப்பு:

நல்ல முறுமுறு தோசை வேண்டுபவர்கள் மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும்.

அடை போன்ற கெட்டியான பக்குவத்தில் வேண்டுபவர்கள், மாவைச் சற்றுக் கெட்டியாகக் கரைக்கவும்.

வேண்டுமானால், 2 மேசைக்கரண்டி தேங்காய்த் துறுவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவை அரைத்தவுடன் சுட்டு விடலாம். புளிக்கவைக்கத் தேவையில்லை.
 
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா,  என் அம்மா

5 comments:

ஜெய்லானி said...

பாக்கும்போதே ஆசையை தூண்டுது. வடை தோசையாச்சா !!! அப்ப இது இட்லிக்கு சரி வருமா ?

Jaleela Kamal said...

நல்ல் மொருகலாக இருக்கிறது, யாரு பத்மா அம்மா?

பாச மலர் / Paasa Malar said...

துவரம்பருப்பு இட்லி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன் ஜெய்லானி.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஜலீலா..

பத்மா...என் அம்மா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அடை மாதிரியே தோசையா..?
தோசை ஊத்தினதுயாரு சூப்பர் ரோஸ்டா இருக்கே..:)

Post a Comment