தேவையான பொருட்கள்:
நண்டு - 8
வெங்காயம் - 2
தக்காளி சிறியது - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 1/4 கோப்பை
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க
என்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டு - 8
வெங்காயம் - 2
தக்காளி சிறியது - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 1/4 கோப்பை
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க
என்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- நண்டுகளைச் சுத்தம் செய்து கொள்ளவும்.சுத்தம் செய்யும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- வாணலியில் எண்ணெய் வைக்கவும். எண்ணெய் சூடான பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- எண்ணெய் விடாமல் வறுத்த கொத்தமல்லி விதை, தேங்காய், மிளகு, சீரகம், மிளகாய்ப்பொடி ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக மசாலாவை அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் இந்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
- மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
- பின் நண்டுகளையும் வாணலியில் சேர்த்து மெதுவாகப் பிரட்டி விடவும்.
- அரை கோப்பை தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
- நண்டுகள் வெந்ததும், மெதுவாகப் பிரட்டி விடவும். மசாலா அடர்த்தியாகும் வரை அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
- கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
(கொஞ்சம் அதிகமாகவே தூவிவிட்டேன்.)
கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை